பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ....

227


மணல் பரந்த பாலையில்

வறண்ட பாலையில், வாழ்க்கை நிலை மிகவும் கடினமாம்."தூய வெள்ளை ஆடையை விரித்து விட்டாற்போல் தோன்றுமாறு வெயில் விரிந்து காயும், கோடைப் பருவரம் நீண்ட மலைச்சாரலில், கொடிய பசியுடைய செந்நாய், வாடிய மரையாவைக் கொன்று வேண்டு மட்டும் தின்று, விட்டொழித்த எஞ்சிய இறைச்சி நெடுந்தொலைவில் உள்ள - வேற்று நாட்டிலிருந்து, கடத்தற்கு அரிய அப்பாலையைக் கடந்து செல்லும் வழிப் போவோர்க்கு உண்ணும் உணவாகும் கொடுமை மிக்க, வெப்பம் மிகுந்த அரிய வழி"

"முகில் விரித்தன வெயில்அவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,
ஒய்பசிச் செந்நாய், உயங்குமரை தொலைச்சி
ஆரீந்தன ஒழிந்த மிச்சில், சேய்நாட்டு
அரும்சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்
வெம்மை ஆரிடை
                 - நற்றிணை : 43 : 1-6

பாலை, தனக்கே உரிய இனிய அழகிய காட்சிகளைப் பெறாமலில்லை. "வளைந்த சிறகினை உடைய பறவகைளின் உள்ளங்கால் சுவடுகள் வரிசை வரிசையாகப் பொருந்திய, நீர்வற்றிய இடங்கள் தோறும் மெல்லிய நுண்மணல் படிந்து கிடக்க, மெல்லென வீசும் வாடைக்காற்று வறண்டு. மோதியதால், கரும்பின் வெண்ணிறப் பூ, புதல் தோறும் ஒரு சேர விரிந்து, அரசனுக்கு வீசப்படும் கவரி போல் ஆடி அழகு செய்ய, கொண்டல் கொண்டலான மேகங்கள் நீங்கிச் செல்வதால், மாறி மாறிக் கண் விழித்துக் காட்டுவதுபோல், ஞாயிறு தோன்றித் தோன்றி மறைய, பகற்காலம் கழிய, மாலைப் பொழுதொடு இராக்காலம் வந்து சேர்தலும், பனி விழுந்து கால் கொள்ளும்".

"கொடும் சிறை
உள்ளடி பொறித்த வரியுடைத் தலைய
நீர் அழி மருங்கின் ஈரயிர் தோன்ற