பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

தமிழர் பண்பாடு


விட்டாள். அவள் பார்வையினின்றும் நம் கணவரைக் காக்க, தோழிமீர்; எழுமினோ எழுமின்!"

"மடக்கண், தகரக் கூந்தல், பணைத்தோள்,
வார்ந்த வால் எயிற்றுச், சேர்ந்து செறி குறங்கின்
பிணையல் அந்தழைத் தைஇத் , துணை இலள்,
விழவுக்களம் பொலிய வந்துநின் றனளே
எழுமினோ எழுமின்எம் கொழுநர்க் காக்கும்"
                     - நற்றிணை : 170:1-5

ஆடவரை அடிமை கொள்ளும் பரத்தையரின் முயற்சி பற்றிய மற்றொரு காட்சி இதோ; ‘'ஊரில் விழாவும் முடிந்து விட்டது, முழவின் முழக்கமும் அடங்கி விட்டது; இந்நியிைல் இவள் யாது கருதினளோ என்று கேட்பாயே யாயின், கூறுகிறேன் கேள். ஒரு நாள் தழை ஆடை உடுத்து, அத்தழை ஆடை அசையும் அல்குலை உடையவளாய்த் தெருவின்கண் இப்பரத்தை சென்றாள். அவ்வளவே, பழைய வெற்றிகள் பல கொண்ட மலையமான் திருமுடிக்காரி, அவ்வோரிக்கு உரிய நகரின் ஒப்பற்ற பெரிய தெருவில் வெற்றிக்களிப்போடு புகுந்தானாக , அதுகண்ட ஓரியின் மக்கள் ஒன்றுதிரண்டு ஆரவாரப் பேரொலி எழுந்துவிட்டது. அது கேட்டதும், ஆராய்ந்து கொண்ட, சிறந்த வளையல்களை அணிந்த அழகிய மேனியை உடைய இவ்வூர் மகளிரெல்லாம், தங்கள் கணவன்மார்களை, அவள் கண்ணில் படாவாறு காத்துக் கொண்டனர். அதனால் இவர்களும் நன்மை அடைந்தார்கள். நடந்தது இதுதான்”,

“விழவும் உழந்தன்று முழவும் தூங்கின்று;
எவன்குறித் தனள் கொல் என்றி யாயின்,
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின்
இளையோள் இறந்த அனைத்திற்குப் பழவிறல்
ஓரிக் கொன்ற ஒரு பெரும் தெருவில்
காரி புக்கநேரார் புலம்போல்,
கல்லென் றன்றால் ஊரே, அதற்கொண்டு
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி.