பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேரண்ட்ஸ்

10 ஆண்டுகள் கழித்து டச்சுக்காரரான பேரண்ட்ஸ் என்பார் சீனாவுக்கு வட மேற்கு வழியைத் தேடும் முயற்சியில் தமது புகழ்மிக்க பயணத்தை மேற்கொண்டார். ஆனால், இப்பயணத் தில் எல்லோரும் தீவினைப் பயனாக இறக்க நேர்ந்தது. இப்பயணத்தில் இவர் தம் குழுவினருடன் அடைந்த துன்பங்கள் அளவிலடங்கா. இவை மனிதனின் நெஞ்சுரத்திற்கும் பொறுக்கும் தன் மைக்கும் சிறந்த சான்றுகள் ஆகும்.

300 ஆண்டுகள் வரை இவர் மடிந்த இடத்தை யாரும் சென்று பார்க்கவில்லை. 1871-இல் கேப் டன் கார்ல்சன் என்பார் அவ்விடத்தைப் பார்வையிட்டார்; கண்டார் பல நினைவுச் சின்னங்களை!

அவர்கள் கட்டிய மரவீடு அப்படியே இருந் தது. அடுப்பில் சாம்பல் அப்படியே கிடந்தது. பழைய கடிகாரம் ஒன்றும் இருந்தது. பேரண்ட் சின் புல்லாங்குழலும் அங்கிருந்தது. இவையும் மற்ற நினைவுச் சின்னங்களும் இன்றும் டச்சு அரசாங்கத்திடம் உள்ளன.

இதற்குப் பின் ஆர்க்டிக் பகுதியில் ஆராய்ச்சி நடைபெற்றது. புதிய பகுதிகள் கண்டுபிடிக்கப் பட்டன. பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் புதியவை எவையும் கண்டுபிடிக்கப்பட வில்லை.