பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

பாஸ்கரத் தொண்டைமான்



சிவபுராணத்தையே


நமச்சிவாய வாழ்க
நாதன் தாள்வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க

என்றுதானே துவங்கி இருக்கிறார். இப்படி எல்லாம் பஞ்சாக்ஷரப் பெருமையை எல்லோரும் கூறுகிறார்களே இதன் உண்மைதான் என்ன என்று அறிய விரும்பினேன். அதிலும் முருக பக்தர்கள் எல்லாம் 'சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரத்தின் அருமையை உணர்வார்களா என்று விசாரிக்க ஆரம்பித்தேன் பலருக்குத் தெரியவில்லை. ஒரு அன்பரோ அது சரவணபவ இல்லை. அதை 'சரஹணபவ' என்றே சொல்ல வேண்டும் என்று ஒரு போடு போட்டார். இதைப் பற்றி எல்லாம் ஒரு சில சொற்களால் சொல்லவே இதனை எழுதுகிறேன்.

எப்படி சிவனை வணங்குகிறவர்கள் நமசிவாய என்றும், விஷ்ணுவை வணங்குகிறவர்கள் நாராயண என்றும் மந்திர உச்சாடனம் செய்கிறார்களோ அதைப் போலவே முருக பதக்தர்ள் சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரிக்கிறார்கள். முருகனுக்கே ஒரு பெயர் சரவணன் என்று அவன் பிறப்பைப் பற்றிய கதை தெரியும். இறைவனது நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த பொறிகளை அக்கினி ஏந்தி வாயுவிடம் கொடுக்க, வாயு கங்கையிலே விட, கங்கை சரவணப் பொய்கையில் விட்டுவிடுகிறாள். அங்கே ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருப்பெற அந்தக் குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் எடுத்துப் பாலூட்டி வளர்க்கிறார்கள். அந்த ஆறு குழந்தைகளையும் அன்னை பார்வதி சேர்த்து எடுத்தபோது கார்த்திகேயன் ஆறுமுகனாக உருப்பெருகிறான் என்று அவனது அவதார தத்துவம் பேசப்படுகிறது. இதனையே கந்தர் கலிவெண்பாவில் குமர குருபரர் விரிவாகப் பாடுகிறார்.


பொங்கும் தழற் பிழம்பை
பொற்கரத்தால் அங்கண்
எடுத்தமைத்து,வாயுவைக்கொண்டு
ஏகுதி என்று எம்மான்
கொடுத்தனுப்ப மெல்லக்