267 - ஆற்றங்கரையினிலே
நலங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு பொலம்பூ ஆடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணம்.” (மீமிசை - மேலே, அணங்கு ஆழி வருத்தும் சக்கரம், பொலம்பூ ஆடை - அழகிய பொன்னாடை, நின்ற வண்ணம் - நின்ற திருக்கோலம்.)
- சிலப்பதிகாரம்.
37 : 2. “ பெருகு மதவேழம்
மாப்பிடிக்கு முன்நின்று இருகண் இளமூங்கில்
வாங்கி - அருகிருந்த தேன்கலந்து நீட்டும்
திருவேங் கடம்கண்டீர் வான்கலந்த வண்ணன் வரை.” (வேழம் ஆண்யானை, பிடி பெண்யானை வரை மலை. - பூதத்தாழ்வார்.
38 : 3. “ செடியாய வல்வினைகள்
தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா
நின்கோயி லின்வாசல் அடியாரும் வானவரும்
அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துஉன்
பவளவாய் காண்டேனே”
(செடி-பாவம்) - குலசேகர ஆழ்வார்.
38 : 4. “ குன்றும் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
- அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை ஒன்று மேதொழ நம்வினை ஒயுமே.”
(ஞாலம்-உலகம், ஒயும்-ஒழியும்.)
- நம்மாழ்வார்.