274 ஆற்றங்கரையினிலே
8. திருவதிகை 59 : 1. “ கொல்லாத சூலைநோய்
குடர்முடக்கித் தீராமை எல்லாரும் கைவிட்டார்
இதுசெயல்என் முன்பிறந்த நல்லாள்பால் சென்றுஇயம்பி
நான்உய்யும் படிகேட்டுஇங்கு அல்லாகும் பொழுது அணைவாய்
என்றார்என்று அறிவித்தான்.”
- பெரிய புராணம்.
60 : 2. “ இடையறாப் பேரன்பும் மழைவாரும்
இணைவிழியும் உழவாரத்தின்
படையறாத் திருக்கரமும் சிவபெருமான்
திருவடிக்கே பதித்த நெஞ்சும்
நடையறாப் பெருந்துறவும் வாகீசப்
பெருந்தகைதன் ஞானப் பாடல்
தொகையறாச் செவ்வாயும் சிவவேடப்
பொலிவழகும் துதித்து வாழ்வாம்”
- காஞ்சிப் புராணம்
62 : 3. “ சுண்ணவெண் சந்தனச் சாந்தும்
சுடர்த்திங்கள் சூள மணியும் வண்ண உரிவை உடையும்
வளரும் பவள நிறமும் அண்ணல்அரண் முரண்ஏறும் அகலம்வளாய் அரவும் திண்ணன் கெடிலப் புனலும்
உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை;
அஞ்ச வருவதும் இல்லை.” (திங்கள் சந்திரன், உரிவை - தோல், ஏறு காளை, அகலம் - மார்பு; தமர் - அடியார்)
- திருநாவுக்கரசர் தேவாரம்.