பின்னிணைப்பு . 288
தன்னைமுன் பறித்துச் சிந்தத்
தரைப்படத் துணித்து வீழ்த்தேன்.”
- பெரிய புராணம்.
26. காரைக்கால்
147 : 1. “வங்கமலி கடற்காரைக்
காலின்கண் வாழ்வணிகர்
தங்கள்குலத் தலைவனார்
தனதத்த னார்தவத்தால்
அங்கவர்பால் திருமடந்தை
அவதரித்தாள் எனவந்து
பொங்கியபே ரழகுமிகப்
புனிதவதி யார்பிறந்தார்.”
(வங்கம் - மரக்கலம்)
- பெரிய புராணம்.
147 : 2. “நம்பர்.அடி யார்அணைந்தால்
நல்லதிரு அமுதளித்தும்
செம்பொன்னும் நவமணியும்
செழுந்துகிலும் முதலான
தம்பரி.வி னால்அவர்க்குத்
தகுதியின்வேண் டுவகொடுத்தும்
உம்பர்பிரான் திருவடிக்கீழ்
உணர்வுமிக ஒழுகுநாள்.”
துகில் - ஆடை பரிவு அன்பு, உம்பர்பிரான் - தேவ தேவன்.)
- பெரிய புராணம்.
148 : 3. “ கடல்மிசை வங்கம் ஒட்டிக்
கருதிய தேயந் தன்னில் அடைவுறச் சென்று சேர்ந்தங்கு
அளவில்பல் வளங்கள் முற்றி இடைசில நாட்கள் நீங்க
மீண்டும்.அக் கலத்தில் ஏறிப்