304
பின்னிணைப்பு
Wi. சேர நாடு
43. முசிரி
235 : 1. “ கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிரி.”
- அகநானூறு.
237 : 2. “ மாவீற் றிருந்த பெருஞ்சிறப்பின்
மன்னும் தொன்மை மலைநாட்டுப் பாவீற் றிருந்த பல்புகழார்
பயிலும் இயல்பிற் பழம்பதிதான் சேவீற் றிருந்தார் திருவஞ்சைக்
களமும் நிலவிச் சேரர்குலக் கோவீற் றிருந்து முறைபுரியும்
குலக்கோ மூதூர் கொடுங்கோளுர் (சே - காளை, இடப வாகனம்)
- பெரிய புராணம்.
238 : 3. “தலைக்குத் தலைமாலை அணிந்ததென்னே
சடைமேல் கங்கைவெள்ளம் தரித்ததென்னே
அலைக்கும் புலித்தோல்கொண்டு
அசைத்ததென்னே
அதன்மேல் கதநாகம்கச் சார்த்ததென்னே
மலைக்கு நிகர்ஒப்பன வன்திரைகள்
வலித்தெற்றி முழங்கிவலம் புரிகொண்டு
அலைக்கும் கடலங்கரை மேல்மகோதை
அணியார் பொழில்அஞ்சைக் களத்தப்பனே.”
- சுந்தரர் தேவாரம்