பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 வல்லிக்கண்ணன் கிளர்ச்சி வள்ளலானேன்! பஞ்சப்புயல் நடுவில்-விஞ்சிப் பாயும் வானூர்தி ஆனேன்! என்றும் , "முட்களில் சுகத்தைக் காண்பேன் - துன்ப முடிவினில் மாற்றம் செய்வேன்’ என்றும் கவிஞர் அறிவிக்கிறார். - 'திடமனத்து உறுதியே என் உடைமை திறமுள சொத்தாம் விஞ்சும் கடல்போலத் துயரம் என்றன் உண்மை கருதியே முடி துணைவன் கடமை செய் அறிவே ஆம் என்-மேன்மை கணிதரும் ஆயுதம் ஆம்’ ான்றும் அவர் கூறுகிறார். 'இன்பம் துன்பம் இரண்டும் சமமாய் எண்ணித் துணிகின்றேன்-உண்மை என்ன என்பதைத் தேடி நாடவே இதயம் பணிகின்றேன், - ...எந்தக் கூலிக்கும் என் அறிவை விற்காக் கொள்கை சுமக்கிறேன்’ உயர்ந்து நடக்கிறேன் என்றும் பெருங்கவிக்கோ தன்னைப் பற்றிப் பாடியிருக்கிறார்.