பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கவிஞர் சேதுராமன் மரபுவழிக் கவிதையில், நல்ல கருத்துக்களை வலியுறுத்தும் தன்மையில், பாராட்டப்பட வேண்டிய அளவு சாதனைசள் புரிந்திருக்கிறார். அவகு டைய கவிதை நூல்கள் பெரும்பாலானவற்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதனால் அவருடைய ஆற்றலையும், படைப்புகளின் தன்மையையும் நான் அறியமுடிந்தது. அவற்றை எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியம் என்று கருதினேன். அதன் விளைவே இந்த நூல். இது பூரணமான திறனாய்வு இல்லை. பெருங்கவிக்கோவின் படைப்புகளில் நான் ரசித்து மகிழ்ந்த நல்ல அம்சங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய முனைந்துள்ளேன். கவிஞரின் படைப்புகளைப் படித்து மகிழ இது ஒரு துரண்டுதலாக அமைந்தால் நல்லது. வல்லிக்கண்ணன்