பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ5 வல்லிக்கண்ணன் பாடு மணக்குதமிழ் ஏடெல்லாம் பாமணக்கும் தேடுபொரு ளெல்லாமே தெய்வ மணங்கமழும் ஊடுபொய்கைத் தாமரை நீ ராம்பல் உளமணக்கும் கோடு மணக்கும் கொடையெலாம் மேல்மணக்கும் நாடு மணக்குதமிழ் நாடெல்லாம் தெய்வமணத் தேடு தமிழ்மணக்கும் பீடுநடை எம்பாவாய்” 'தமிழ் நடைப் பாவை'யின் எளிமைக்கும் இனிமைக் கும், கருத்து நயத்துக்கும் சொல்லோட்டத்துக்கும் இவை நல்ல எடுத்துக்காட்டுக்கள் ஆகும். பாவை முழுவதுமே படித்துச் சுவைத்து இன்புறத்தக்க இலக்கிய விருந்தாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் நடைப் பயணம் மேற்கொண்ட பெருங்கவிக்கோ தேமதுரத் தமிழின் பெருமையை உலகமெலாம் பரப்புவதற்காக உலகநாடுகளில் சுற்றித் திரிகின்றார். உலகக் கவிஞர் மன்றங்களிலும் மாநாடு களிலும் தமிழ் முழக்கம் செய்கின்றார். - குறித்து அவர் பாடியிருப்பது நினைவுகூறத் شاه ع