பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

பலமாப் பேசாதீங்க. நீங்க போங்க. எங்நேரமானலும் நானே பணத்தைக் கொண்டாந்து தக்துடறேன். ஆபத் தும் சம்பத்தும் யாருக்கும் உண்டுன்னு நீங்க கேட்டதில் லேயா? என்ன செய்யறது?...எங்க போருத காலம் இப் படிக் கஷ்டப்படுகிருேம்! தயவு பண்ணி இன்னிக்கு ஒரு நாள் மாத்திரம் உங்க கோபத்தைக் கட்டுப்படுத்திக்கங்க ஐயா!’

உதிர்ந்த நீர்மணிகள் வந்தவரின் இதயமற்றபேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.

இந்த மட்டிலாவது விஷயம் அடங்கியதே என்று ஆறுதல்கொண்ட சாவித்திரி, குனிந்த தலே கிமிராமல் அடுப்படிக்குள் சென்றாள். கைகளிலே தேங்கிய முகத் தோடு துயரத்தின் ஒருருவாக அமர்ந்தாள் அவள்.கடந்து போன காற்பத்தைந்து நாட்களின் இருட்டுப் பகுதி’ அவளது மனப்படுதாவில் ஒளிக்கோடாக விளங்கியது. ஆனல், விடிவும் விகளவும் ஒளி கொண்டிருக்கவில்லையே!.

‘அரைத் தம்ளர் காப்பி குடித்துவிட்டுப்போனவர் எங்கெங்கே வேலைக்கு அலையருரோ?...தண்டையார் பேட் டையிலிருந்து பஸ்ஸில் எங்கே சென்றிருக்கப் போருர்? அவரிடம் துட்டு எப்படி இருந்திருக்கும்? அம்பிகையின் அருளாலே இன்னிக்கானும் ஏதாச்சும் வேலை குதிர்ந்தால் எவ்வளவோ சிலாக்கியமாகிவிடும்!”

உலே வைத்தாள் சாவித்திரி. அரிசி கொதித்தமாதிரியே மனமும் கொதித்தது. அதிகாலேயில் காப்பி தயாரித்துக் கொடுத்துவிட்டு, குளித்து முழுகி, ஒன்பது மணிக்குள் சாப்பாடு போட்டுத் தன் கணவனே வேலைக்குஅனுப்பி வைத்த நாட்கள் இப்போது அவளுக்குக் கனவோ என்றுகூடத் தோன்றியன.

安· 率