பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

மருந்துக் கம்பெனி ஒன்றில் டெஸ்பாட்சிங் கிளார்க்’ அலுவல் கிடைத்தது. தொண்ணுாறு ரூபாய்ச் சம்பளம். குடித்தனம் வைத்தான் ராமசாமி. அரிசி, புளி முதலியன கிராமத்திலிருந்து வந்தன. எப்படியோ இரண்டு வருஷங் கள் தன்னைப்போல ஒடின. ஆறு மாதங்களுக்கு முன்னர், இருவருடன் மூன்றாவது நபர் சேரும்படியான ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. ஆல்ை, அதுவும் கழுவியது. கருச் சிதைவு உண்டாக்கிய சாவித்திரியின் உடல் கலக் குறைவச் சமன் செய்யவே அவனுக்கு நூறு ரூபாய்க்கு மேல் செலவாகிவிட்டது. கடைசியில், வேலை பார்த்த இடத்திலும் அவனுக்குத் தோல்வியே கிடைத்தது. தபால் தலைகளின் வரவு செலவுக் கணக்கில் ஏற்பட்ட தவறின் விளைவாக அவன் வேலையை விட்டு நீக்கப்பட்


‘சாவித்திரி! அந்த மானேஜரின் ஒன்றுவிட்ட அத்திம் பேர் பையன் வந்திருக்கிருன். அவனுக்கு என் வேலையைக் கொடுத்துவிட்டார் மானேஜர். நீ கவலைப்படாதே. தெரிக் தவர்களைக் கண்டு எப்படியும் இன்னொரு வேலை பார்த்துக் கொள்கிறேன்!” என்றான் அவன். இடையில் நழுவிய நாட்கள் சாமான்யமானவையா? அவை ஏற்படுத்திய மனக் கவலைகள் எத்தனையோ உண்டே?

சாவித்திரி தன் கினேவு எய்தினுள். விழி நீர் கால் விரல்களில் தெறித்து விழுந்து கொண்டிருந்தது. செருப்புச் சத்தம் கேட்கவே, கண்களைத் துடைத்துக் கொண்டு தெருவைப் பார்த்தாள். பக்கத்து வீட்டுக்காரர் புடவை, பலகாரங்களுடன் உள்ளே நுழைந்தார். ஒதுங்கிக்கொண்ட அவள் தன் வீட்டுப்பகுதிக்குள் அடி யெடுத்து வைத்தாள். அருகிருந்து புறப்பட்டு வந்த பேச் சரவம் காதுகளில் ஒலித்தது. அவர்கள் மாட்னிஷோ” வுக்குப் போகப் போகிருக்கள்! கேத்திக்கு வாடகைக்குக் கொடுக்க பணம் கடன் கேட்டதுக்கு இல்லை என்றாளே கோமதி?...ம்!”

ఆ 7