பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133


என்று குரல் தந்து முன்வந்து வணங்கி நின்றான் ஒர் இளைஞன். அவன்தான் இந்தக் கந்தப்பன். தான் யாரு மற்ற அநாதை என்றும், ஏதாவது வேலை கொடுத்தால் நாணயமாகச் செய்வதாகவும், கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொள்வதாகவும் சொல்லிக் கண்ணீரும் கம்பலையுமாக நின்று வேண்டினாள் அவன்.

‘கடையிலே ஆறேழு பேர்கள் வேலைக்கு இருக் காங்க. வீட்டிலே என் பெண்சாதிக்கு உடம்பு சரி யில்லை. அதனுலே எனக்கு இப்போதைக்குத் தேவையா னது சமையல் ஆள் மட்டுக்தான்!” என்றார் செட்டியார், இரண்டு நிமிஷச் சிந்தனைக்குப் பிறகு,

“எஜமான்! உங்களுக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்கும். நான் இதற்கு முன்னால் சமையல் வேலை செய்திருக்கிறேன். செட்டிகாட்டில் பள்ளத்தூரில் உ. அ. மு. வீட்டிலே வேலை பார்த்திருக்கேனுங்க. ஒரு வாரம் பாருங்க. பிடித்தால் வச்சுக்கிடுங்க இல்லையானல் என்னைத் துரத்திப்பிடுங்க!’ என்று மன்றாடினன் கந்தப்பன்.

"சரி, உன் ஊர் எது?”

"எனக்குச் சிவகெங்கைச் சீமைங்க!"

“சரி. ஒரே பேச்சாகச் சொல்லுகிறேன். மூன்று வேளையும் இங்கேயே சாப்பிட்டுக்கொள். சம்பளம் பதினேஞ்சு ரூபாய் தாரேன்!"

"ரொம்ப நல்லதுங்க, முதலாளி!"

முதலாளியின் நாணயமான ஏவலாக கந்தப்பன் இயக்கத் தொடங்கிச் சுவர் காலண்டரில் தினத் தாள்களில் முன்னூற்று இருபத்தைந்து கிழித்தெரிந்தான். இரண்டு முறை மாத்திரம் ஒவ்வொரு நாள் லீவு எடுத்துக்கொண்டு போய் தெரிந்தவர்களுக்கு சென்று வந்