பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146


பைரவி, தெய்வாம்சப் பண்பு பொருந்தியதாம். அம்மா சொல்லுவாள். இப்போது அவை அனைத்தும் பறந்து போயின. நான் விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் இந்த ராகங்களும் சேர்ந்துவிட்டனவா?

ஹூம்! என்னவோ சொல்ல வந்தேனே! ஆமாம்: இப்போது நினைவு தெளிவு காண்கிறது. நான் அம்மா, அப்பா எல்லாரும் உட்கார்ந்திருக்கையில், அப்பா என்ன நோக்கி "அம்மா!" என்று விளித்தார். உடனே நான், "என்ன மகனே!” என்று கூவினேன் துடுக்கான செயல். ஆனாலும், எனக்கு ஏக மகிழ்ச்சி. பெதும்பைப் பிராயம். நல்ல வேளை; அப்பா கோபிக்கவில்லை; குதுகலம் அடைந்தார். இச்சம்பவம் நினைவுக்கு வரும்போது, சிரிப்புக்கு வழிவிடாமல் தப்புவது சாத்தியமா? நீங்களே சொல்லுங்கள்.

"காந்தி!"

அப்பாவின் வலது கையில், உறை நீங்கப்பெற்ற பெரிய கடிதமொன்று காட்சி கொடுத்தது.

"என்ன அப்பா?"

“இப்படி உட்காரு காந்தி!"

உட்கார்ந்தேன். அப்பா என் மீது ஆழிய நோக்கு ஒன்றைச் செலுத்தினார். விழிகள் கலக்கம் கண்டன.

நாள் முக்குடும் அடுப்படியிலே நின்று எனக்கு வேகவச்சுக் கொட்டிறத்துக்கே உனக்கு நேரமும் பொழுதும் சரியாகிவிடுதேம்மா?... ஐயையோ, பவுன் நிறத்திலே இருக்க உன் மூஞ்சி இப்படி கறுத்துப் போயிடுச்சேம்மா?... என்னை மன்னிச்சிடு காந்தி!.."