பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14


என்று கேட்டான், வலது கையை மேஜையின் தலைப்பு வரை நீட்டியவாறு.

நீட்டி நின்ற கையைத் தள்ளிவிட்டு "எங்கிட்டவா நீ பத்து ரூபா குடுத்தே? டேய்!...என்னாடா 'டாவு' விடறே?" என்று கோபாவேசமான குரல் ஒன்று அவனைத் தாக்கவே, திக்பிரமை கொண்ட சங்கிலி, நீர் சுரந்த நேத்திரங்களால், நாணயங்களை ஆண்ட அந்த 'மகானு பாவனை' ஏறிட்டுப் பார்த்தான்.

'ஆ...நீரா?'...

"ஏம்பா, ராம்... இந்தப் பய காசு இல்லாம வந்து பொய் சொல்லி, பிரியாணி, ஆம்லெட்டுகளை களவாடிக்கிட்டுப்போக வந்திருக்கான். கேட்டா, பெரிய அரிச்சந்திரன் போல் கதை அடிக்கிறான். எல்லாத்தையும் பறிச்சுக்க. இவனை வீரட்டியடி! ஊம். சல்தி!"...

ஏழையழுத கண்ணீர் அம்பலம் ஏறுமா?

"ஏய்யா! ஓம்மளுக்கு இதயமே இல்லையா?...எம் மாதிரி பிள்ளை உமக்கும் இருக்குதே ஐயா?.. பின்னே , ஏனய்யா என்னைச் சோதிக்கிறீங்க இப்படி?" என்று 'நியாயம்' கேட்கப்போக, அவனது பிஞ்சுக் கன்னங்கள் இரண்டிலும் கைத் தழும்புகள் பதிந்தது தான் மிச்சம்! சகடயோகத்தின், அகங்காரச் சிரிப்பில் சங்கிலியின் சட்டைப் பையிலிருந்த பொங்கல் இனாம் கரைந்தது!

விநாடிகள் ஓடின.

புது மானேஜர் நாசூக்காக ஏப்பம் பறித்தார். ஏப்பத்தின் விலை, ரூபாய்: பத்து, காசு: எண்பத்தைந்து....!

மூன்றாவது ஆட்டம் தொடங்க சில நிமிஷங்களே இருந்தன.