169
மணி ஏழு அடித்தது.
ராஜாவுக்குக் குளிப்பாட்டிச் சட்டை போட வேண்டும்.
வேலாயி உள்ளே பார்வையினைச் செலுத்தினாள்.
பெரிய ஐயாவும் கணக்குப்பிள்ளை ஒருவரும் சிறிய பீரோவைத் திறந்து போட்டுக் கொண்டு அதன் ஓரத்தில் அமர்ந்து இருந்தார்கள். புரோநோட்டுக்கள் சிதறியிருந்தன. குறிப்புச் சிட்டை கணக்குப் பிள்ளையின் கையில் இருந்தது. மாதக் கடைசி செல் வைக்க வேண்டியவைகளையும், வட்டி வாங்க வேண்டியவைகளையும் காலவதி ஆகும் தருணத்தை நெருங்கியவைகளையும், காதுகிள்ளி பைசல் ஆக வேண்டியவைகளையும் இனம் பிரித்து செட்டில் செய்ய வேண்டாமா? அந்தக் குவியலுக்கு மத்தியில்-அதாவது, ஆயிரக்கணக்கான ரூபாய்களை விழுங்கி ஆறு காசு வெள்ளைக் காகிதங்களாக வடிவெடுத்த அந்தப் பிராமிஸ்ரி கோட்டுக் குவியல்களுக்கு மத்தியில் அமர்ந்து லூட்டி அடித்துக் கொண்டிருந்த ராஜாவைக் கைத்தாங்கலாகப்பற்றி இழுத்துச் செல்வதற்குள் வேலாயிக்குப் பெருமூச்சு முட்டிற்று. கால்மூட்டு வலித்தது. நாலு வீசை தாளுமோ? ப்யூ! நான் என்னத்தைக் கண்டேன்? பொட்டைச்சி’
திலகர் திடலில் ஏதோ கூட்டம். கதிர் அரிவாள் கொடிகள் பறந்தோடின. மைக்ரடோன் வைத்துப் பேசிச் சென்றார்கள்!
வேலைக்காரிக்கு வேடிக்கைப் பார்க்கிற புத்தி இருக்லாமா?
ராஜா இப்போது ஜம்மென்று இருந்தான். யாட்லி பவுடர் பூசும் உறவும் உரிமையும் அவன் அம்மாவுக்கே உண்டாம்!