பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170


வேலைக்காரி வந்து தலையைச் சொறிந்தபடி நின்றாள். தலையில் பேன் இல்லை. உப்பு புளிக்குக் காசு வேண்டும். ஆமாம், சம்பளத்தில்தான்! அவள் மச்சானுக்குச் சோறு ஆக்கிப் போடவேண்டாமா? செவந்திக்குட்டிக்கு நேரம் காலம் தெரியவே மாட்டேனென்கிறது. அழுவதற்கு! ஆனாலும் பெற்ற வயிறு துடித்தது.

“இருடி!"

பங்களாச் சொந்தக்காரி திரும்பினாள். ஒரு கட்டு நியூஸ் பேப்பர் வந்து விழுந்தது. "இந்தாடி! இதை உம் புருஷன் கிட்டே கொடுத்து வித்து அந்தப் பணத்தை சம்பளத்திலே கணக்குவச்சிக்கிட்டு நீ எடுத்துக்கடி!" என்றாள் அதிகாரத் தோரணையுடன்.

'அம்மா! வந்து...’ என்று பல்லக் காட்டடினாள், வேலாயி. பல் வலியா ஊஹூம்!

‘அரை ரூவாகூட தாளாதும்மா வந்து.’...

‘போடிபோய்த் தொலை! மெட்ராஸ் வேலைக்காரி கூட உங்கிட்ட பிச்சை வாங்கணும்! சரி பேப்பர் பணத்தை நீயே இனமா எடுத்துக்கடி! ஐயா காதுக்கு எட்டப் போகுதடி! ஒடிட்டு ஜல்தியா வரவேணும்!’

அனுமத்தாக ஒரு ரூபாய் லாபம் கிட்டிய மகிழ்வின் திளைப்பில், பிறந்த நாளின்ணு என்னுங்க அம்மா? என்று கேட்டுத் தெளிய வேண்டுமென்று கொண்டிருந்த நப்பாசை ஈடேறவில்லை!

செவந்திக் குட்டியையும் பேப்பர் கட்டையும் மாற்றி மாற்றித் தாக்கி வந்து குடிசையை அடைத்தவள், பேப்பர்க் கட்டைப் பரணில் வீசிவிட்டு,செவந்திக்குட்டியை மண்தரையில் வாகு பார்த்துவாட்டமாக உட்காரவைத்து அருமை மகளுக்குப் பாலமுதம் ஊட்ட, கொட்டடி