பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173


வேலாயிக்கு நெஞ்சிலடித்த மாதிரி இருந்தது அப் பேச்சு. 'ஏம்மா! பணக்காரங்க மட்டுந்தானா அவங்க அவங்க குழந்தை குட்டிகளுக்குப் பிறந்த நாள் வைபவம் கொண்டாடுறது? ஏழை பாழைங்க கொண்டாடப் புடாதின்னு சட்டம் உண்டுங்களா?’ என்று பொங்கி வந்த ஆத்திரத்துடன் கேட்டுவிட்டாள் வேலாயி.

தாரிணிக்குக் கோபம் வந்ததே, பார்க்கவேண்டும்: பவுடர் அப்பியிருந்த முகம் கறுப்பாகச் சிவந்தது. அவ்வளவு கோபம்! சீ நாயே! ஓடு என் சோற்றைத் தின்று விட்டு என்னையா எதிர்க் கேள்வி கேட்குறே? என்று திட்டிக்கொண்டிருக்கையில், உள்ளே காரசாரமாகத் திட்டிக் கொண்டிருந்த தன் கணவரின் கோப மொழிகள் அவள் செவிகளில் விழுந்தன.

தாரிணிக்குக் குலை நடுக்கம் எடுத்தது. ஐயாயிரம் ரூபாய் கடன் கொடுத்து, எழுதி வாங்கிய புரோநோட்டு ஒன்றைக் கானோமாம்!

வீடு அமளி துமளிப்படாதா?

வேலாயி கடந்து வந்த துயரத்தை ஒதுக்கிவிட்டு, கடந்து கொண்டிருக்கிற துன்பத்துக்கு அனுதாபப்பட்டவளாக, அடுப்படி, கூடம், முகப்பு என்று தேடினாள். ராஜாவும் பிஞ்சுக் கரங்களைத் துழாவித் தேடுகிறானே!

தாரிணிக்கு எப்போதோ பார்த்த சினிமா ஒன்று ஞாபகம் வந்தது. அப்படத்தில் ஒரு திருட்டில் வேலைக்காரி சந்தேகத்துக்கு ஆளான நாட்டம் நினைவில் குதிக்கவே, இங்கே இப்பொழுது எஜமானி அம்மாளும் வேலாயி மீது பாய்ந்து கோபமாக குதித்தாள்.

“ஐயோ அம்மா’ என்று விம்மித் துடித்தாள் வேலைக்காரி,