பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15
இரு மனம்

ந்தக் கோடை விடுமுறையில் ஆனந்தனின் வீடு கல்யாண வீடுபோலக் கூத்தும் கும்மாளமுமாகக் கலகலத்திருந்தது. ஆனந்தனின் அழைப்பின்பேரில் அவன் தங்கை பார்வதியும் அவள் புதல்வி ராதையும் விருந்தினராக வந்திருந்தார்கள். ஆபீஸ் அலுவல் நிமித்தம் பார்வதியின் கணவன் வரமுடியவில்லை. இவர்கள் மட்டும் வந்தார்கள். இந்த விருந்தினரின் வருகையால் அதிக ஆனந்தம் எய்தியவன் ஆனந்தனின் புதல்வன் கண்ணன்தான். ஏனென்றால் கண்ணனுக்கு விளையாட்டு ‘ஜோடி’யாக அங்கு ராதை இருந்தாள்!

ராதையைப் பார்ப்பதற்குள் அவன் எவ்வளவு துடி துடித்துப் போய் விட்டான்? தினமும் காலண்டரைப் புரட்டிப்பார்த்து ‘பள்ளிக்கூடம் கோடைக்குச் சாத்த இன்னும் எத்தனை நாள் இருக்கிறது?’ என்று கணக்கிட்டு நாட்களை ஒட்டிய சங்கடம் அவனுக்கல்லவா தெரியும்? பட்டணத்தில் வாசித்துக்கொண்டிருக்கும் ராதையை