பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

177


வேலை காரணமாக உடன் பிறந்த குடும்பங்கள் இரண்டும் பிரிய நேர்ந்தது. இரு குடும்பங்களுக்குமிடையே விடப்பட்டிருந்த தூரத்தை இட்டு கிரப்பும் அன்புப் பாலமாக―பாசத் தொடராக அமைந்தது அவர்களிடையே கடந்து வந்த கடிதத் தொடர்பு.

கண்ணன் பத்து வயது நிரம்பப் பெற்றவன். ராதைக்கு ஆறாவது ஆண்டு ஆரம்பம்.

அவன் நாலாவது வகுப்பு. அவளுக்கு ‘ஆனா ― ஆவன்னா’ ஏடு தலைகீழ்ப்பாடம்!

கண்ணன் கொஞ்சம் குறும்பு. சும்மா இருக்கவே மாட்டான். ராதையை ஏதாவது ‘நிமிட்டி’ பண்ணி அழ வைத்து வேடிக்கை பார்ப்பதில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி. ராதையின் வேண்டுகோளுக்கிணங்க ஆனந்தன் ரேடியோ வைத் திருப்பினான், வேண்டுமென்றே ‘ஸ்டிரைக்’ செய்வான் கண்ணன். உடனே மேலிடத்துக்கு தாக்கிது தூது செல்லும் ராதையின் சார்பில்.

“நீங்க ரெண்டு பேரும் எப்படியாவது போங்கள். புருஷனும் பெண்டாட்டியும் இப்போ சண்டை போட்டுப்பிங்க. சற்றுக் கழித்துப் பார்த்தா கூடிக் குலாவிப்பிங்க” என்பான் ஆனந்தன்.

அடுத்த விடினாயில் என்ன மாயமிருக்குமோ, ராதையும் கண்ணனும் திரும்பவும் கும்மாளம் போட ஆரம்பித்து விடுவார்கள், தம்பதிகளிடையே கணத்தில் தோன்றி கணத்தில் மறையும் பிணக்குப்போல.