பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180


இரவு கண்ணன் கண்ட கனவின் விளைவே இருவரிடையிலும் ஏற்பட்ட மனத்தாங்கலுக்குக் காரணம். அவன் நிர்மாணிக்கும் அழகான மணல்வீட்டை ஆசையுடன் காட்டப்போக, அவள் அதைத் ‘திடுதிப்’டென்று அழித்து விடுவதாகக் கனவு காண்கிறான். அதற்கு வஞ்சம் தீர்க்க வேண்டுமென்ற ஒரே எண்ணத்துடன் புரண்ட அவனை ராதை எழுப்பியதும் பழைய ஞாபகம் மட்டுமே அவன் தளிர்நெஞ்சில் முன்னின்றது. கடைசியில் ராதையின் வீட்டைச் சிதைத்து விடுகிறான் கண்ணன்! பூ மனத்தின் விந்தையைப் பாருங்கள்!

“ராதை, என்னை மன்னிச்சுப்பிடு. நான் முட்டாள். நீ என் ராதையில்லையா? இதற்கெல்லாம் கோபிக்கப்படாது ― ராதை” என்று கெஞ்சினான் அவன். பின் காரணத்தையும் விளக்கினான். ஆனால் அவன் எதிர் பார்த்தபடி அவள் வாய்திறக்கவில்லை. பேசாமடந்தயைாக இருந்த அப்பேசும் பொற்சித்திரம் ― ராதை தேம்பினாள். கண்ணனுக்குப் ‘பக்’கென்றது. அவன் கண்களும் கலங்கின.

“ராதை, நொடிப்போதிலே நீ கட்டின வீடாட்டமாக் கட்டித் தந்துட்டாச் சரிதானே. அப்புறம் அழவும்படாது. அத்தை, அம்மாகிட்டே போய்ப் புகார் சொல்லவும் கூடாது...”

கண்ணன் அவ்வடிவழகியை ஏக்கத்துடன் நோக்கினான். அவன் பார்வையில் என்ன வசியமோ? மின் வெட்டில் ராதை சிரிப்பதைக் கண்டவுடன் கண்ணனுக்கு உயிர் மீண்டும் வந்ததுபோன்ற உணர்வு பரவியது.

“அத்தான். கடைசி மட்டும் நீ என்ன செய்யப் போறேன்னு பார்க்கலே நான் அப்படி அழறது கணக்கா நடிச்சேன். இந்தத் தரம் உனக்கு ‘மாப்பு’ ஆமா; இனி.