பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


சும்மா சொல்லலாமா?―சித்தர்கள் மகா ஞானிகள். வாழ்க்கை எனும் கணப்புக் குழியில் இந்த மனிதப் பிறப்பெடுத்தவர்களைப் புடம் வைத்து எடுக்கப் பயன்படும் மாய சக்தியைச் சோதனைகள் தாம் கைக் கொண்டிருக்கின்றனவாம்! வாஸ்தவம்தான்!...

கரை நிறை நீர் சேர் காவிரி அன்னையின் கழலடி பதிந்த பொற்புடைத்தது சோணாடு. அம்மகிமையின் நிழலில் தழைத்த குடில்கள் அனந்தம்! குக்கிராமங்கள் மிகுதி. எட்டுக் குடிக்குப் பெருமை தேடித் தந்தான் ஓவியன்; அவன் அற்ப மானுடனல்லன். ஆண்டவன். தாதைக்கு உபதேசித்த பாலன். அவனது கருணைக்கு இலக்கான பதிதன்னில்தான் பார்வதியும் அழகுப் பதுமைக்கு நிகராகப் பிறந்தாள். பொய்மை வாழ்விற்கு எடுத்த உண்மை யாக்கை அவளுடையது. சாமான்யமான குடும்பம்!

காலம் ஓடியது. அவள் ஓடினாள்.

காலம் அவளுக்குக் கன்னிப்பட்டம் சூட்டிற்று. கன்னிமாடத்தில் உலவிடும் ராஜகுமாரியானாள். இளவட்டங்களைப் பொறுத்தமட்டில், காற்றில் பறக்கும் பட்டமாகப் பறந்தான் ராமதாஸ். அவள் அவனுடைய அத்தை மகள். உறவும் உரிமையும் நெருங்கப் பெற்ற வாய்ப்பே அவனுடைய மனக் கனவுகளைப் போஷித்து வளர்த்துக் செழித்துத் தழைக்கச் செய்யுவல்லதாகவும் அமைந்தது. அவன் கனவு கண்டான்; அவளும் கனாக் கண்டாள். கனவு உள்ளங்களின் பரிவர்த்தனைக்கு அடையாளமாக அவளுக்கு அவன் ‘கணையாழி’ ஒன்றைக் கொடுத்தான். இருவரையும் மணக் கோலத்தில் கண்டு களிக்க விரும்பினார்கள், இருதரப்புப் பெற்றோர்களும் வந்தது வினை. சாதாரணமான வினையா அது உம்மைப் பழவினையின்
ஆ 2