பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


“அன்புள்ள அத்தையவர்களுக்கு, ராம்தாஸ் நமஸ்காரம் செய்து எழுதுவதானது:

நானும் என் மனைவி தங்கம்மாவும் புதுப்பாடம் கற்றுக்கொண்டோம். அந்த நாளிலே நான் என் அத்தை மகள் பார்வதிக்கு என் அன்பின் அடையாளமாகக் கொடுத்த மோதிரமும், என் மனைவி தன் அன்பு அத்தான் சுந்தருக்குத் தந்த மோதிரமும் கடைசிக் கட்டமாக உங்கள் வீட்டில் ‘அடையாளம்’ வைக்கப்பட்டிருக்கும் ‘துப்பு’ விவரத்தை நீங்கள் எழுதினீர்கள். அன்புக்குச் சின்னமாக அமைய வேண்டுமென்று கொடுக்கப்பட்ட பொருள்களின் விபரீத முடிவைக் கேட்டு வருந்தவே, எங்கள் பொருள்களை உடனடியாகத் திருப்பி யனுப்புமாறு நாங்கள் இருவரும் வெவ்வேறு விவாசமிட்டுத் தபால் அனுப்பினோம், நாங்கள் இருவரும் ‘தம்பதி’ என்பதைப் பாவம், அந்தத் தம்பதி எப்படி அறிய முடியும்?... ஆம்; ஒரு புதுப்பாடம் கிடைத்தது எங்களுக்கு. காதலின் உண்மைப் பொருளைப் போதித்து உணர்ந்திடவே, நாங்கள் அவ்வாறு கடிதம் எழுதினோம். ‘காதலென்பது ஒரு பொய் விளையாட்டு’...அன்பெனும் சக்தி மிக ஆழமுடையதெனச் சொல்கிறார்கள். அப்படியிருந்தால், எங்கள் பரிசு மோதிரங்களே அவர்கள் இருவருமே அடகு வைத்திருக்கமாட்டார்கள்; இப்போது எங்களுக்குத் திருப்பி யனுப்பியிருக்கவும் மாட்டார்கள்!

இப்படிக்கு,
―ராமதாஸ்.”

பி.கு:― இக்கடிதத்தை மறந்துவிடாது, பார்வதி―சுந்தர் தம்பதியிடம் காண்பிக்கவேண்டும்.