பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


சொகமா, வள்ளி?”

68 உம்!”

“ஏம்மா தேவானை, செளக்கியமாயிருக்காயா?”
“ஆமாங்க!”
இருவரும் மறைந்தனர். வளையோசையின் நாத இழைகள் மட்டும் சில தங்கின. 
‘மச்சான்! தைபொறக்கப் போகுதே, நிெனைப் பிருக்குதா?”

“இருக்குங்க, அத்தான்!...இந்த வருசம் உங்களுக்கு, தங்கச்சிக்கு, எங்க மாப்பிள்ளைக்கு எல்லாருக்கும் என் வீட்டிலேதான் பொங்கல் விருந்துச் சாப்பாடாக்கும்!” என்றார் திருவம்பலச் சேர்வை.

‘அதிருக்கட்டும் திருவம்பலம். இந்தத் தையிலே என் மகன் முருகனேடே கண்ணுலம் கடந்தாகனும், ஆமாம், சொல்லிப்புட்டேன்’ என்றார் வேலாயுதம். சற்று நேரம் திருவம்பலம் முகத்தைப் பார்த்தார்.

அதுக்கென்னங்க அத்தான்?...முடிச்சிட்டாப்போ வுது. தாராடிசாமி கிருபையாலே பணம் காசு, கெல்லுப் பில்லு எல்லாந்தான் கைக்கு மெய்ப்ாயிருக்குங்களே?”

“அதான் எனக்கும் புரிஞ்ச கதையாச்சே, மச் சான்?” என்றார் அத்தான்காரர். -

“பின்னே எதுதான் அத்தான் உங்களுக்குப் புரி யலே'-பதட்டம் தந்த மன உழைச்சலுடன் அடுத்த விடிை அண்டியது. -

“உங்கிட்டே பொண்ணுங்க ரெண்டு இருக்கு: ஆன எங்கிட்டே மாப்பிள்ளை ஒண்ணே ஒண்னுதானே இருக்கு, மச்சான்?”