பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


"பழய ராமாயணம் இது!" .

"நம் காதல் ...?"

"நம் முன் அதுவும் இறந்துபட்டது!"

“அப்படியென்றால்...!"

"உன் வாயிலிருந்து இந்த மாதிரி. முடிவை எதிர்ப் பார்க்கத்தானா இவ்வளவு காலமாக நான் ஆவியாக அலைந்து திரிந்தேன்!"

'நான் என் அத்தானுக்கு உரியவள். என்னை அவரிடம் அனுப்பிவிடுங்கள்!..."

"பொன்னி !..."

"ம்... நெருங்காதீர்கள்!"

"பொன்னி ...!"

"என் தாலி உம்மை சுட்டெரித்துவிடும்!"

"என்னைப் பற்றி நான் அக்கறை கொள்ள வேண்டாமா? இதோ, தமிழ்ப் பண்புக் கோட்டைக் கிழித்திக் காட்டுகிறேன். இதை தாண்டினால், உம் ஆவி. நரகலோ கத்துக்குச் சென்றுவிடும்; நினைவுறுத்துங்கள்!"

"பொன்னி !"

"ஐயா, புவனநாதரே!"

"அத்தான் என்றாவது கூப்பிடு!"

"நீர் அதற்கு உரிமையற்றவர்"

"பொன்னி !"

"ம்...விலகுங்கள்!"

"முடியாது!"

"முடியாதா?"

"ம்!"

"இதோ பாரும்!"