பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

"நன்றி! ஆனால்?"

“ஐயப்பாடா?"

"அல்ல. ஆனால் , அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் ...? ஈரைந்து மாதம் சுமந்து பெற்ற அந்த அன்னை ...?" என்று எதிர் வினா விடுக்கலானாள் நாரி.

பிறப்பிலி பெருமூச்செறிந்தார்:

"பூலோகத்தில் காதலுக்குப் புது மாதிரியான பொருள். - கவியாணத்துக்கு முன் னும் கலியாணத்துக்குப் பின்னும் கூட 'காதல்' என்ற ஒன்று உதயமாவதே கிடையாது. ஆனால், அவர்கள் வாய் என்னவோ, 'எல்லாம் உணர்ந்த மாதிரி, எடுத்ததெற்கெல்லாம் 'காதல், இன்றேல் சாதல்!' என்ற ஒரே பல்லவியைத் தான் பாடித் தொலைக்கிறது. பூலோகக் காதலை தேவலோகக் காதலாக ‘ரசாயன மாற்றம்' செய்வதாக உறுதி சொன்னான் அவன் -ஆமாம்; இந்தக் குழந்தையின் தகப்பன். அவள்பிள்ளைக்கனியின் தாய் உண்மையென்று நம்பினாள். உயிரும் உயிரும் ஒன்றாயின. உடலும் உடலும் முதல் இரவு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடின. இருள் சிரித்த அந்தக் காட்டிலே., பூலோக சுவர்க்கத்தைத் தரிசித்தனர் காதலர்கள்.. ஆனால், காலம் சிரித்தது; ஊர் சிரித்தது; சமூகம் சிரித்தது. கண் கண்ட பூலோக சுவர்க்கமாம்" இக் குழந்தையைக் கையால் எடுக்கத் தெம்பீன்றி, அவளைப் பரபர வென்று இழுத்துக் கொண்டு "ஓடோடி விட்டான் அந்தப் பாவி! தேவலோகத்தில் மலர வேண்டிய பாரிஜாத மலர் வழி தவறிப் பூலோகத்தில் பூத்துவிட்டது!" என்றார். பார்வதி கொழுநன், கண்ணீருடன்.

"ஆதியே! பாரிஜாதம் கருகிவிடும் போலிருக்கிறது. நல்ல முடிவு காட்டுங்கள், துரிதப் படுத்துங்கள்!" என்று ஆதுரப்பட்டாள் சிவை.