பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


கொஞ்சம் பேசக் கொள்ள இருக்கிறார்கள், கஞ்சிதான் ஆகாரம். சதா உன் நினைப்பாகவும் மாப்பிள் ளையின் நினைப்பாகவும் இருக்கிறார்கள். ஒரு முறை குடும்பத்தோடு - இங்கு வந்து செல்வது வே உசிதம். எல்லோருக்கும் அது ஆறுதலாக இருக்கக் கூடும். நீ, குழந்தை, மாப்பிள்ளை அவர்கள் ஆகியவர்களின் க்ஷேம லாபத்துக்குப் பதில் போடவும். தம்பி குமாருக்குப் பாப்பாவின் முகம் அடிக்கடி கனவில் வருகிறதாம். உன் அப்பா விரைவாகவே நல்ல சுகம் அடைந்து விடுவார்கள். ஆண்டவன் அனுக்கிரகம் நமக்கு எப்போதும் சித்திக்கும்....

இப்படிக்கு,

உன் தாயார்,

அகிலாண்டம் அம்மாள்."

எழுதிய கடிதத்தை கொண்டவரிடம் நீட்டினாள், அவள்.

படித்துப் பார்த்தார் ராமலிங்கம். “ஆல்ரைட்", என்றார்.

ஸ்கூலுக்குப் போன குமாரிடம் கொடுத்து. அதைத் தபாலில் சேர்க்கச் சொன்னாள் அகிலாண்டம், சலனம் மறைந்து, சாந்தி பிறந்தது.

காலம் எனும் கனவின் நிழல் நிச்சலனமாய் நீண்டது!.

"லெட்டரைப் பெட்டியிலே போட்டுப்பிட்டேன். அம்மா !"

மதிய உணவுக்கு வந்த குமார். இப்படிச் சொல்லிவாய் மூடவில்லை.

வாசலில் சைக்கிள் மணிச் சத்தம் இடித்தது.