பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

தந்திச் சேவகன்!

இடியால் தாக்குண்டவள் ஆனாள் அகிலாண்டம்.

“அத்தானுக்கு உடல்நிலை கவலைக்கிடமாயிருக்கிறது! —கமலாட்சி.”

“தெய்வமே! இது என்ன சோதனை?” என்று விம்மினாள் அவள். நாடி நரம்புகள் அனைத்தும் இற்றுச் செயல் தப்பிப் போய் விட்டதென அவளுக்குத் தோன்றியது. “என்னம்மா அது?” என்று துளைத்தான் குமார். அவள் என்ன சொல்வாள், பாவம்! பதி இருக்கும் உடற் கேட்டில், இந்தத் துயர்ச் செய்தியை வெளியிடலாகாது என்பதாக முடிவு கட்டினாள். பூஜை அறைக்குச் சென்று திரும்பினாள் அவள். வழி கேட்ட விழி வெள்ளத்துக்கு வழி சொன்னாள்.

அப்போது வாசலில் காரொன்று வந்து நின்றது.

பிரக்ஞை இழந்த நிலையில் காணப்பட்டான் கார்த்திகேயன்!

“அம்மா, தெய்வம் என்னோட குங்குமத்தைப் பறிச்சுக்கிட்டு, நிரந்தரமா நரகத்திலே தள்ளிப்பிடுமா, அம்மா? என்னமோ, எனக்கு ஒரே பயமாயிருக்குதே அம்மா?... அத்தான் எனக்குக் கிடைக்காமப் போனா, அப்புறம் நானும் குழந்தையும் என்னம்மா செய்வோம்?... ஐயையோ! கடவுளே...!”

எரிமலையின் வெடிப்பு வாயில் கால் பதித்து நின்றாள் அகிலாண்டம். அன்பு மகளின் அழுகை அவளுடைய பெற்ற மணி வயிற்றில் இடியாக இடித்தது. அவள் பேசியப் பேச்சுக்கள் அவளது கண்களைத் தோண்டியெடுத்தன. “கமலாட்சி, அப்படியெல்லாம் கெட்ட பேச்சை மனசாலே கூட நினைக்காதே, அம்மா! நம்பினவங்களைத் தெய்வம் சோதிச்சாலும், கடைசி முடிவு. நமக்குச்