பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


"ஆண்டவனே!...என் உயிரை நீ எடுத்துக்கொள். என் மாப்பிள்ளையைக் கொண்டு சென்றுவிடாதே. அவரைக் காப்பாற்று! என் ஒரே அருமை மகளின் மாங்கல்யத்தைக் காத்துத்தா அப்பனே!"

மனம் போட்ட புடத்தினின்றும் கனன்று எழுந்த சொக்கத் தங்க சிதறல்களா அவ்வார்த்தைகள்...?

ஆராதனைக் கூடத்தில் மண்டியிட்டு வணங்கிக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார் ராமலிங்கம். -

ஒடினாள் அகிலாண்டம். 'அகிலா! நிஜமாவே நான் அதிர்ஷ்டம் செஞ்சவன்தான். உன்னை மாதிரி மேனி அழகும் உள்ளத்தழகும் கொண்டவ எனக்குப் பெண் சாதியாக வாய்க்கிறதென்பது லேசுப்பட்டக் காரியமா, என்ன? ஆயுள் முச்சூடுமே உன் பக்கத்திலேயே இருக்க வேணும்னு நினைச்சிக்கிட்டிருக்கேனாக்கும்’ என்று முதல் இரவில் மொழிந்த சொற்கள் அவளுள் பண் பாடின. ஊதுவத்தி சாம்பல் மிதித்தவள், குனிந்து திரும்பினாள். அந்தச் சாம்பல் காட்டிய வாழ்வின் தத்துவத்தை ஜீரனிக்க முயன்றவளாக, ஒடிச்சென்று தன் கணவரைத் தூக்கி மடியில் கிடத்திக்கொண்டாள். தாலியைக் கையில் எடுத்தாள் அவள். குனிந்த வேளையில், தாலியில் தன்னையோ, தன் கணவரையோ காணவில்லை. அவள்காண முடியவில்லை அவளால் தன் மகளையே தரிசித்தாள்! "அப்பா!...அப்பா!" என்று விம்மிப் பொருமினாள் கமலாட்சி. ராமலிங்கம் கண்ணீரைப் பெருக்கியவாறு, நகைபூத்த வதனத்தோடு காணப்பட்டார். உயிர்த்துணையின் விழிகளைத் துடைத்தார். ஊதுவத்தியின் உயிர்ப் புள்ள வாசனை மிதந்து வந்தது!

மறுமுறையும் கார்த்திகேயன் அச்சுறுத்தும் ஒலியைக் கூட்டினார். அகிலாண்டத்தை முக்திக்கொண்டு ஓடிப்