பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


சித்தம் பேதலித்தவளைப் போன்று விழித்தாள் அகிலாண்டம்: 'நான் பாவி!...' என்றுக் கதறிக் கதறி, தன் மார்பில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டாள் அவள்!

நித்திய நிருத்தியக்கூத்தின் நியதிக் கோட்டுக்குள்ளே அகப்பட்டு ஆனால், சுயநலம்-பாசம் ஆகிய தளைகட்கு அகப்படாமல், தன் போக்கில்-தன் இஷ்டத்தில்-தன் லயிப்பில் இயங்கிக்கொண்டே இருந்தது அந்தப் 'புண்ணிய பூமி'.