பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*76 ஆலேக் கரும்பு யாமல் கின்ருள். 'என்ன அம்மா உனக்கு வேண்டும்? அஞ்சாமல் சொல்' என்று உமாபாகன் திருவாய் மலர்ந் அவள் சிறிது உணர்வு பெற்றுத் தலையை கிமிர்ந்து பார்த்தாள். இறைவன் திருமுடியளவும் அவள் கண்கள் வட்டமிட்டன. அப்போதும் அவள் திடுக்குற்ருள். ஆம்; அப்பெருமான் திருமுடியில் உள்ள பிறையைக் கண் டாளோ இல்லையோ, 'அட! இங்கும் இந்தச் சனியன் இருக்கிறதா?’ என்று பயந்தாள். சந்திரனல் தன் தலைவி படும் வேதனையைக் கண்டு மனம் மறுகித்தானே அவள் இங்கே வந்தாள்? இங்கும் அந்தப் பாழும் சந்திரன் இருக் கிறதே இறைவன் அதைத் தன் தலையில் அல்லவா துரக்கி வைத்துக்கொண்டிருக்கிருன்? என்ன அகியாயம் இது?- . இப்போது தோழிக்கு வேறு ஓர் எண்ணம் தோன்றி யது. என் தலைவிக்கு இவர் அருள் செய்வதைப் பின்பு பார்த்துக்கொள்ளலாம். அதைச் சொல்ல இது சமயம் அன்று நயம் திகழும் குங்குமக் குழம்பணிந்த கொங்கை யழகியாகிய தேவி அருகில் இருக்கிருள். ஆகையால் இப்போதுமற்ருெரு காரியத்தையாவது சாதித்துக்கொள்ள லாம். இந்தச் சந்திரனத் தொலைக்க வழி தேடலாம் 'என்ன பெண்ணே, தடுமாறுகிருய்?" என்று மறுபடி யும் கொச்சைப் பெருமானிடமிருந்து அன்புக் குரல் எழுந்தது, மறுபடியும் அவள் தன் கண்ணே அப்பெருமான் மேல் ஒடடினள். இறைவனுடைய சட்ாபாரத்துக்குள் ஒளிக் திருந்த பாம்பு சற்றே தலை நீட்டியது. மற்றச் சமயங்களில் பாம்பைக் கண்டு அஞ்சும் தோழி இப்போது பேருவகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/82&oldid=744450" இலிருந்து மீள்விக்கப்பட்டது