பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு #45 அரணாம் நமக்கென்றும் ஆழிவலவன் முரன்நாள் வலம்சுழித்த மொய்ம்பன்-சரண் ஆமேல் ஏது.கதி? ஏதுநிலை? ஏதுபிறப்(பு) என்னாதே ஒதுகதி மாயவனையே ஓர்த்து* (அரண் ஆம்.இரட்சகனாக இருப்பவன்; ஆழிவலவன். திருவாழியை யுடையவன்; முரன்.ஓர் அசுரன்; நாள்.ஆயுள்; மொய்ம்பன்.மிடுக்கை யுடையவன்; கதி. ஞானம்; நிலை-ஆசாரம்; பிறப்பு. பிறப்பு; கதி-உபாயம்; ஒர்த்து-நன்றாக அறிந்து கொண்டு; ஒது.அநுசந்திi. என்றும் தெளிவுறுத்துவார். அவன் இரட்சிக்கும்போது நம்முடைய பயனற்ற ஞானத்தையும், இகழத் தக்க ஆசாரத்தையும், தாழ்வான பிறப்பையும் பார்த்து நம்மைத் தவிர்ப்பான் என்ற ஐயம் வேண்டா; அவனை யன்றி வேறு அரண் நமக்கு இல்லையென்று அவனையே சரண் அடையவேண்டும்; சுயமுயற்சியை விட்டொழிக்க வேண்டும்' என்கின்றார். இப்படிப் புலன்களை அடக்கு வதற்கு ஒரே குறுக்கு வழி பக்திதான்; இறைவனிடத்தில் மனம் சுழித்தோடினால் ஆசைகளும் எண்ணங்களும் தாமே ஒடிப்போகும். ஆகவே, செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே! மெய்ம்மையே கான விரும்பு?? |செம்மையால்-முறைப்படி, உள் உருகி , உருக்கத் துடன்; மெய்ம்மையே.உள்ளபடியே; காண. சேவிக்க; விரும்பு.ஆசைப்படு} என்று நெஞ்சை உற்சாகப்படுத்துகின்றார். உண்மையாக உள்ளம் உருகி உவப்புடன் உலகளந்தானை வழிபடும் 92. மூன் திருவந். 78 93. டிெ-22, 10