பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திசாரர் 18? எல்லா நிலைகளிலும் பெரிய பிராட்டியாராகிய இலக்குமி இறைவனை விட்டு ஒருக்கணமும் பிரிவதில்லை. திருமழிசையாழ்வார் இந்த இறைவனையே வழி படுவார். இந்த வழிபாடு - அன்புக் 5ಿಎಡಿ' - நாளடை வில் முதிர்ந்து முதிர்ந்து வாய் என்ன சொல்லிக் கொண் டிருந்த போதிலும், கை எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும், உள்ளத்தை அன்பனாகிய ஆழியானோடு ஒன்றி நிற்கச் செய்தது. இதனை, சொல்லினும் தொழிற்கணும் தொடக்குஅறாத அன்பினும் அல்லுகன் பகலினொடும் ஆனமாலை காலையும் அல்லிகாண் மலர்க்கிழத்தி காத மாத போதினைப் புல்லிஉள்ளம் விளைவுஇலாது பூண்டுமீண்டது இல்லையே. என்ற பாசுரத்தில் கண்டு மகிழலாம். வாழ்க்கையின் பிற்பகுதியில் இந்த உள்ளம் காலையிலும் மாலையிலும் இரவிலும் பகலிலும் அவனுடைய திருவடிகளிலேயே ஒன்றி நின்றது என்றும் அதிலேயிருந்து மீண்டதில்லை என்றும் பேசுகின்றார். உன்னபாதம் என்னகின்ற ஒண்சுடர்க் கொழுமலர் மன்னவந்து பூண்டுவாட்ட மின்றி எங்கும் நின்றவே: |மன்ன . நிலையாக1 என்ற பாசுரத்தால் இது தெளியப்படும். ஒருநாள் இத்தகைய பக்தியநுபவம் உ ச் ச நி ைல அடைந்து 68. திருச். விருத். 118 69. Gðiš - 1 19