பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

ஆழ்வார்களின் ஆரா அமுது

. சித்திரகூ டத்திருந்தான் தன்னை யின்று தில்லைநகர்த் திருச்சித்திர கூடக் தன்னுள் எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற இருகிலத்தார்க் கிமையவர்நேர் ஒவ்வார் தாமே, {4}. வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று. வண்தமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி கலைவணக்கு கோக்கரக்கி மூக்கை நீக்கிக் கரனோடு துண்டணன்தன் உயிரை வாங்கி சிலைவணக்கி மான்மறிய எய்தான் தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடக் தன்னுள், தலைவணக்கிக் கைகூப்பி ஏத்த வல்லார் திரிதலால் தவமுடைத்துத் தரணி தானே. (5) இந்த இரண்டு பாசுரங்களில் கதையின் ஒட்டத்தைக் கான முடிகின்றது. (3) இராமகாதையில் கோசலை பெற்ற பேற்றை. எண்ணுகின்றார் ஆழ்வார். அவள் இராமனைக் குழந்தைப். பருவத்தில் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுக் கூறின அநுபவத்தைக் கற்பனையில் காண்கின்றார். தானே தாயாகிவிடுகின்றார்; தாலாட்டுகின்றார். இந்த அநுபவம் இவருக்குத் திருக்கண்ணபுரத்து சௌரிராசன் விஷயமாகக் செல்லுகின்றது. மூனறு பாசுரங்களில் ஆழங்கால் படுவோம். மன்னுடிகழ்க் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே! தென்இலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர் கன்னிகன்மா மதில்புடைசூழ் கணபுரத்துஎன் கருமணியே! என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ! (1)