இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்
125
கண்ணனே நேரில் வந்து தன் கைத்தலம் பற்றித் தன்னைத் திருமணம் செய்து கொள்ளக் கனாக் கண்டதாகத் தன் தோழியிடம் கூறுகிறாள். அது ஒரு அற்புதமான காட்சியாகும்.
- வாரண மாயிரம் சூழ வலம் செய்து
- நாரண நம்பி நடக்கின்றான் என் எதிர்
- பூரண பொற்குடம் வைத்துப் புற மெங்கும்
- தோரணம் நாட்டக் கனாக் கண்டேன்
தோழி நான் என்று பாடுகிறார்.
- இந்திரன் உள்ளிட்டட தேவர் குழாம் எல்லாம்
- வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து
- மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை
- அந்தரி சூட்டக் கனாக் கண்டேன்
தோழி நான் என்று பாடுகிறார்.
- நாற்றிசை தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
- பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத் தேத்தி
- பூப்புனை கண்ணிப் புனித னோடென்றன்னை
- காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன்
தோழி நான் என்று பாடுகிறார்.
- மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
- முத்துடைத் தாம நிரை தாழ்ந்த பந்தற் கீழ்
- மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
- கைத்தலம் பற்றக் கனாக் கணாக் கண்டேன்
தோழி நான் என்று பாடுகிறார்.