6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 148
பாரையூரும் பாரம் தீரப் பார்த்தன் தன்
தேரையூரும் தேவதேவன் சேருமூர்
என்றும் பாடி மகிழ்கிறார். மேலும்
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி
முதுதுவரைக் குலபதி யாக் காலிப் பின்னே இலைத்தடத்த குழலூதி யாயர் மாதர்
இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்தகிற்பீர் மலைத்தடத்த மணி கொணர்ந்து வையமுய்ய
வளம் கொடுக்கும் വത്രങ്ങു பொன்னி நாடன் சிலைத் தடக்கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணி மாடம் சேர்மின் களே!
என்று மனமுருகப் பாடி மகிழ்கிறார்.
இன்னும் நறையூர் நம்பியின் பெருமைகளைக் கண்ணன்
வடிவத்திலும் அக்கண்ணன் செய்த அருஞ்செயல்களையும் பாராட்டி பக்தியுட்ன் ஆழ்வார் பாடுகிறார். -
ஒளியா வெண்ணெயுண்டா னென்று
உரலோ டாய்ச்சி யொண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான்
என்றும்
வில்லார் விழவில் வட மதுரை
விரும்பி விரும்பா மல்லடர்த்து