6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 162
பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய்கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்தமால்”
என்று பாடுகிறார்.
"விரலோடுவாய் தோய்ந்த வெண்ணெய்
கண்டு ஆய்ச்சி
உரலோடுறப் பிணித்த ஞான்று-குரலோவா
தேங்கி நினைந்த யலார் காண இருந்திலையே?
ஓங்கோத வண்ணா! உரை!”
எனவும் பாடுகிறார்.
"வரைகுடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரைவிடை யேழ் செற்றவாறென்னே-உரவுடைய, நீராழியுள் கிடந்து நேரா நிசாசரர் மேல், பேராழி கொண்ட பிரான்."
என்று ஆநிரை காத்த அருஞ்செயல்களையும்,
"வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய் தேனாகிப்பாலாம் திருமாலே - ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள் மண்ணைய் உமிழ்ந்த வயிறு”
என்று வெண்ணெய் திருடி உண்ட லீலைகளையும் வியந்து ஆழ்வார்
அழகாகப் பாடுகிறார்.
பூதத்தாழ்வார்
பூதத்தாழ்வார் மாமல்லபுரம் என்னும் திருக்கடல் மல்லையில் மாதவிப்பந்தலில் உள்ள குருக்கத்தி மலரில் தோன்றியவர் என்பது