6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 186
வண்ணமால் வரையையெடுத்து மழை காத்ததும்,
மண்ணை முன் படைத்துண்டு மிழ்ந்து
கடந்திடந்து மணந்த மாயங்கள்,
“நின்றவாறும், இருந்த வாறும், கிடந்தவாறும்
நினைப்பரியென
ஒன்றலா உரு வாய் அருவாய நின் மாயங்கள்,
என்றெல்லாம் கண்ணனின் மாயங்களையும் உபாயங்களையும் புகழ்ந்தும் வியந்தும் ஆழ்வார் பாடுகிறார்.
குருகினங்களையும், கருநாராய்களையும், புள்ளினங்களையும்,
அன்னங்களையும், குயில்களையும், கிளிகளையும், நாகணவாய்ப் பறவைகளையும், வண்டினங்களையும் எம்பெருமானிடத்திற்குத் துது அனுப்புவதாக அருமையான பாடல்களை ஆழ்வார் சிறப்பாகப் பாடியுள்ளார்.
“குரவையாய்ச் சியரோடு கோத்ததும்
குன்ற மொன்றேந்தியதும் உரவு நீர்ப்பொய்கை நாகம் காய்ந்ததும்
“கேயத்துங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்த
தும் கெண்டை யொன்கண் வாசப்பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும்
'நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை
மேய்த்ததும் நீனெடுங்கைச் சிகரமாகளிறட்டதும்
நோவ ஆய்ச்சி உரலோடார்க்க
இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்