இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 263
“குனியும் வான்முகத்தான் - கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே - வண்ண
மியன்ற சவ்வாதும்
“೧೫rira- முடிப்பதற்கே - மணம்
கூடு தைலங்களும்
வண்டு விழியினுக்கே - கண்ணன்
மையும் கொண்டு தரும்.
“தண்டைப் பதங்களுக்கே - செம்மை
சார்ந்து செம்பஞ்சு தரும்
பெண்டிர் தமக்கெல்லாம் - கண்ணன்
பேசரும் தெய்வமடி”
"குங்குமம் கொண்டுவரும் - கண்ணன்
குழைத்து மார்பெழுத சங்கையிலாத பணம் - தந்தே
தழுவிமையல் செய்யும்
"பங்க மொன்றில்லாமல் - முகம்
பார்த்திருந்தாற் போதும்
மங்களமாகுமடீ - பின்னோர்
வருத்தமும் இல்லையடி’ என்று
பாடி நம்மை மகிழ்விக்கிறார்.