இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
7. கண்ணனைப் பற்றி பாரதி
கண்ணம்மா
கண்ணனைக் கண்ணம்மாவாகக் கற்பித்துப் பாடிய பெருமை பாரதிக்கே உண்டு. கண்ணம்மாவைச் செல்லக் குழந்தையாக, அன்புக் காதலியாக, அழிவில்லாக் குல தெய்வமாகப் பாரதி பாடி
மகிழ்கிறார்.
கண்ணம்மா - என் குழந்தை
1.
சின்னஞ் சிறுகிளியே - கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே என்னைக் கலிதீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்”
“பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே அள்ளியணைத்திடவே - என் முன்னே
ஆடிவரும் தேனே'
“ஓடி வருகையிலே - கண்ணம்மா
உள்ளம் குளிருதடீ
ஆடித்திருதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவிதழுவுதடி"
" உச்சிதனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடி மெச்சியுனை ஊரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி"