இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
7. கண்ணனைப் பற்றி பாரதி 276
என்றும்,
சோதிப்பணா முடியாயிரம் - கொண்ட
தொல்லறி வென்னுமோர் பாம்பின் மேல் - ஒரு
போதத்துயில் கொளு நாயகன் - கலை
“போந்து புவிமிசைத் தோன்றினான் - இந்தச்
சீதக்குவளை விழியினான் - என்று
செப்புவர் உண்மை தெளிந்தவர்”
"நானெனும் ஆணவம் தள்ளலும் - இந்த
ஞாலத்தைத்தான் எனக் கொள்ளலும் - பர
மோனநிலையில் நடத்தலும் - ஒரு
மூவகைக் காலம் கடத்தலும் - நடு
வானகருமங்கள் செய்தலும் - உயிர்
யாவிற்கும் நல்லருள் பெய்தலும் - பிறர்
ஊனைச் சிதைத்திடும் போதினும் - தன துள்ளம் அருளினெகுதலும்"
“ஆயிரங்கால முயற்சியால் - பெற
லாவரிப் பேறுகள் ஞானியர் - இவை
தாயின் வயிற்றிற் பிறந்ததன்றே - தமைச்
சார்ந்து விளங்கப் பெறுவரேல் - இந்த
மாயிரு ஞாலமவர் தமைத் - தெய்வ
மாண்புடையார் என்று போற்றுங்காண் - ஒரு