பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

59


அந்தரம் பாரிடமில்லை மற்றிதுவோ
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே! ”

என்று பாடுகிறார் அடிப்பொடியாழ்வார்.

இன்னும்,

வம்பவிழ் வானவர் வாயுரை வழங்க
மாநிதி கபிலை யொண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டு நன்முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ?
தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி,
அம்பரதலத்தில் நின்றகல்கின்ற திருள்போல்
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே!

என்றும்,

ஏதமில் தண்ணுமை யெக்கம் மத்தளியே
யாழ் குழல் முழவ மோடிசை திசை கெழுமி
கீதங்கள் பாடினார், கின்னரர் கெருடர்,
கந்தருவரவர் கங்கலுக ளெல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,
ஆதலில் அவர்க்கு நாளோலக்கமருள
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே!

என்றும்,

"கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன. இவையோ?
கதிரவன்கனை கடல் முளைத்தனன் இவனோ?