பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

95


நீண்ட நெடும் போராட்டங்களின் வளர்ச்சியாக வெற்றியாக நாடு விடுதலை பெற்றது. விடுதலை பெற்றதும் அரசியல் சாசனம் உருவாக்கப் பட்டுள்ளது. நமது அரசியல் சாசனத்தின் படியும், இதர பல சட்டங்களின் படியும் இந்திய மக்கள் அனைவரும் சாதி, மத, இன, மொழி, பால் வேறுபாடியின்றி சமம் என்று நிலை பெற்றிருக்கிறது. சட்டப்படி சமமானாலும், நடைமுறை வாழ்க்கையில் பல பிரச்னைகள் நீடிக்கின்றன. நமது மக்களின் உணர்வு நிலையை உயர்ந்த மட்டத்திற்கு உயர்த்த வேண்டும். அந்த மேலான பணிகளிலும் நாம் வெற்றி பெறுவோம். ஆழ்வார்கள் நாமம் வாழ்க. பாரதியின் வழியில் நாம் முன் செல்வோம்.