இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அன்பு
அன்பின் அகத்துணர்வே வாழ்க்கையை
ஆக்கும் ஒளிச் சுடராம்.
அன்பின் உறுதியிலே - வாழ்க்கையின்
ஆற்றல் பெருகிடுதே.
உன்கைப் பிடிமண்ணை - அன்பினால்
ஒளிர்சுடர் பொன் னாக்குவாய்!
அன்பின் நிறைவாழ்வினால் மூன்றிலை
ஆசையால் முத்தமிடு!
அன்பின் மதுவாலே - பண்புகள்
ஆறாய்ப் பெருகிடுமே.
அன்பின் அடைமொழியில் - இறைமை
ஆட்பட்டு உயர்ந்திடுமே.
அன்பின் அணைப்பினிலே - காதலின்
ஆர்வக் கொடி படரும்.
அன்பின் வலையொன்றினால் - மண் விண்ணின்
யாவுமே நாமாகுவோம்.
98