பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     அன்பு

     அன்பின் அகத்துணர்வே வாழ்க்கையை
     ஆக்கும் ஒளிச் சுடராம்.
     அன்பின் உறுதியிலே - வாழ்க்கையின்
     ஆற்றல் பெருகிடுதே.

     உன்கைப் பிடிமண்ணை - அன்பினால்
     ஒளிர்சுடர் பொன் னாக்குவாய்!
     அன்பின் நிறைவாழ்வினால் மூன்றிலை
     ஆசையால் முத்தமிடு!

     அன்பின் மதுவாலே - பண்புகள்
     ஆறாய்ப் பெருகிடுமே.
     அன்பின் அடைமொழியில் - இறைமை
     ஆட்பட்டு உயர்ந்திடுமே.

     அன்பின் அணைப்பினிலே - காதலின்
     ஆர்வக் கொடி படரும்.
     அன்பின் வலையொன்றினால் - மண் விண்ணின்
     யாவுமே நாமாகுவோம்.

98