பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     நிறைவு

     நெஞ்சின் நிறைவே வேடனுக்கொரு
     வேட்கைக் கலையைக் கற்பிக்கும்.
     நெஞ்சின் நிறைவே உலகை வெல்லும்
     நேய முறையைக் கற்பிக்கும்.
     நெஞ்சின் நிறைவே சமுகத்திற்கு
     நெகிழ்வை, வறுமை தருகிறது.

     நெஞ்சின் நிறைவே மண்ணில் அமிழ்தின்
     நீர்மைப் பண்பைத் தருகிறது.
     நெஞ்சின் நிறைவே காலம், தொலைவை
     நேர்நின் றெதிர்த்து வென்றிடுமே.
     நெஞ்சின் நிறைவே அடிமை இடத்தில்
     நிமிர்ந்த தலைமை தந்திடுமே.

99