இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அன்பும் உண்மையும்
அன்பே எல்லா
ஐயங்களையும் எரிக்கட்டும்
அன்பே உன்னை
அரிமாவைப்போல் ஆக்கட்டும்
உண்மைக் கன்றி
மற்றொன்றுக்கு வணங்காதே
திண்ணிய நெஞ்சைக்
கொண்டார்குண்மை தென்புண்டு.
அரிமாப் போன்றோர்
அன்பால் உண்மை கொள்வதினால்
நரிமாத் தன்மை
தப்பியும் வாழ்வில் நயவாதே.
100