கொண்டிருந்ததை இக்பாலின் தோழரும் அவருடைய கவிதைக் கலையை நன்கு அனுபவித்து விமர்சித்தவருமான சையிது அப்துல் வாயித் தமது IQBAL, his Art and Thought என்ற நூலில் விளக்கியுள்ளார்.
படைப்புத் தொழிலில் இறைவனுடன் உயர்ந்த நிலையில் நின்று ஈடுபட்டிருக்கும் சிறந்த கலைஞன் ஒருவன், இறைவனுடைய படைப்பு முயற்சிகளை விடத் தன்னுடைய சிருஷ்டிகள் மேம்பட்ட கலை, தொழில் நுணுக்கங்கள் கொண்டிருப்பதைக் காண்கிறான்; இதை இறைவனிடமே அக் கலைஞன் சுட்டிக் காட்டுகிறான். இதை இக்பால் பின்வருமாறு பாடுகிறார்.
“இறைவ, இருள் ஆட்சி செலுத்தும் இரவைப்
படைத்தவன் நீ;
இருள் அகற்றி ஒளிபரப்பும் விளக்கைப்
படைத்தவன் நான்!
களிமண்ணைப் படைத்தவன் நீ;
அழகு சிந்தும் வண்ணக் கிண்ணம்
படைத்தவன் நான்! .
பாலை நிலத்தையும் மலைகளையும் காடுகளையும்
படைத்தவன் நீ;
பூங்காக்களையும் தோட்டங்களையும் பழமுதிர்ச்
சோலைகளையும் படைத்தவன் நான்!
நீ கல்லைப் படைத்தாய்;
நல்லழகு உணர்த்தும் கண்ணாடியை நான்
படைத்தேன்!
நஞ்சைப் படைத்தவன் நீ என்றிடில்
அதை நல்மூலிகையாக மாற்றியவன் நான்.”
நெஞ்சினிச்சு, சிந்தனைக்கு விருந்து தரும் இவ் வழகிய கவிதையில் கவியின்லட்சணங்களை இக்பால் மிகத் தெளிவாகக் கூறி விட்டார்.
15