பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயே !

                அம்மா உன்னிடம் 
                பெற்ற பயிற்சியே பெரும் புகழை 
                இம்மா நிலத்தில் 
                நான் அடைந்துயர உதவியது: 
                செம்மாந் துயர்ந்த நம் 
                மூதாதையரின் குடிப்புகழை 
                அம்மா உன்னுடை
                அன்பால் உலகம் அறிந்ததுவே.
                தாயே நீ, ஒரு . 
                பொன்னே டாக விளங்குகிறாய், 
                நீயே எனக்கு 
                வாழ்க்கை நெடுக நெறியுரைத்தாய். 
                தூயேன் ஆகத் 
                தோழனும் ஆக உலகிதனில் 
                வாயேன் என்று 
                வாழ்க்கைக் கல்வி வழங்கினையே.


                              24