பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



    என் வேட்கை
    அழகிய முகத்தைக் கண்டால் 
    அதைவிட எழில் மிகுந்த 
    அழகிய முகத்தைக் காண 
    ஆவலால் பறக்கின்றேன் நான்.
    செங்கதிர் ஒளியில் விண்மீன் 
    செழிப்பினைக் காண வேட்பேன், 
    பொங்கொளி விண்மீன் தன்னில் 
    செங்கதிர் பொலிய வேட்பேன்.
    எந்தஓர் இடத்தையும் நான் 
    இலக்காகக் கொள்வதில்லை, 
    இந்தஓர் உலகில் சாவே 
    ஓய்வெனும் இன்பம் ஊட்டும்.






                       35